முந்திரி பருப்பு ஏற்றுமதி
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த வியாபாரி சமீர் லட்சுமிசந்த் (வயது45). இவருக்கு பேஸ்புக் மூலம் நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 பேரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முந்திரி பருப்புகளை வாங்கி ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினர். இதை நம்பிய சமீர் லட்சுமிசந்த் ரூ.1 லட்சம் 65 ஆயிரத்துக்கு முந்திரி பருப்புகளை வாங்கி கப்பலில் நைஜீரிய நாட்டுக்கு அனுப்பினார். அங்கு விற்பனை செய்ததில் அதிக லாபம் கிடைத்ததாக கூறி அந்த நபர்கள் சமீர் லட்சுமி சந்தின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தினார்கள்.
இந்த நிலையில், அந்த நபர்கள் அதிகளவில் முந்திரி பருப்புகளை வாங்கி அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். இதற்காக அவர்கள் நவிமும்பையை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் செல்லும்படி சமீர் லட்சுமிசந்தை அறிவுறுத்தினர். இதை நம்பிய அவர் அந்த நபர்கள் தெரிவித்த வியாபாரியை நவிமும்பையில் சந்தித்து பேசினார்.
8 பேர் கைது
அப்போது முதலில் ரூ.23 லட்சத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தும்படி அந்த வியாபாரி கூறினார். அதன்பேரில் சமீர் லட்சுமி சந்த் அவரது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார். அதன்பின்னர் அந்த வியாபாரியையும், நைஜீரியை சேர்ந்த சேர்ந்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.