இரு நாடுகளிடையிலான வர்த்த கத்தை ஐந்து மடங்காக அதிகரிக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போது இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 10,000 கோடி டாலராக உள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகம் 2012-ம் ஆண்டிலேயே 58 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் உறுதியாக உள்ளது அவர்களது பேச்சில் வெளிப்பட்டது. 400 கோடி டாலர் முதலீடு மற்றும் கடன் அளிக்க ஒபாமா முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.
அமெரிக்க நிறுவனங்கள் ஊக்குவிப்பு
இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை ஊக்கு விக்கும் வகையில் அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு 100 கோடி டாலர் நிதி உதவி அளிக்கப்படும் என ஒபாமா அறிவித்துள்ளார். இதேபோல அமெரிக்க வெளிநாடு தனியார் முதலீட்டு கார்ப்பரேஷன் 100 கோடி டாலர் நிதியை சிறு மற்றும் நடுத்தர இந்திய நிறுவனங்களுக்கு கடனாக அளிக்கும் என்பதும் சிறு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியே.
இது தவிர மரபு சாரா புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு உதவ 200 கோடி டாலரை அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு முகமை ஒதுக்குவதாகக் கூறியுள்ளது இத்துறை சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும். அனைத்துக்கும் மேலாக இரு தலைவர்களும் நேரடியாக பேசு வதற்காக `ஹாட்லைன்’ வசதி ஏற்படுத் தப்படும் என்ற அறிவிப்பு, இருதரப்பு உறவை மேலும் வலுப் படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் என்று நிச்சயம் நம்பலாம்.
ஒபாமா, மோடி இடையிலான புரிதல் பல தருணங்களில் நன்கு வெளிப்பட்டது. இது எதிர்காலத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்த உதவும்.
பலன்கள் 10
$ அணு சக்தி ஒப்பந்தத்தில் இரு நாடுகளிடையே நிலவி வந்த தேக்க நிலை நீங்கியுள்ளது.
$ அணு விபத்து பாதுகாப்பு பிரச்சினையிலிருந்து இந்தியா வெளி வந்துள்ளது.
$ இரு நாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிக்க 400 கோடி டாலர் ஒதுக்குவதாக ஒபாமா அறிவித்துள்ளார்.
$ சுற்றுச் சூழல் பாதுகாப்பு மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக வழியேற்பட்டுள்ளது.
$ இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 100 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
$ இரு நாடுகளிடையிலான ஒப்பந்தங்களை கண்காணித்து அதிகாரிகள் நிலையிலான முட்டுக்கட்டையை நீக்க குழு அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
$ பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் அலுவலகம் முன்வந்துள்ளதோடு பெரிய திட்டப் பணிகளை கண்காணிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
$ 10 ஆண்டுகளுக்கான புதுப்பிக்கக் கூடிய ராணுவ ஒப்பந்தம் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் ராணுவத்துக்குக் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. புதிய ராணுவ சாதனங்களை கூட்டாக இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
$ விசாகப்பட்டினம், ஆஜ்மீர், அலகாபாத்தில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிக்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.
$ பாரம்பரிய மருத்துவ முறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் அமெரிக்கா தயாராக உள்ளது.
—————————-
அமெரிக்காவில் உங்கள் சொந்த நிறுவனங்களை துவங்கி அமெரிக்க வங்கிகளில் கடன் பெற்று ஏற்றுமதி செய்ய முடியும். அவ்வாறு தொழில் துவங்க விரும்புவோருக்கு ஓம் முருகா உதவி செய்ய காத்து இருக்கிறது. +919943826447, tamilembassy@gmail.com